31% பொதுப்போட்டி பிரிவின் பிரதிநிதித்துவம் யார், யாருக்கு?- ராமதாஸ்
31% பொதுப்போட்டி பிரிவின் பிரதிநிதித்துவம் யார், யாருக்கு? வெள்ளை அறிக்கை தேவை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.மீதமுள்ள 31% இட ஒதுக்கீடு பொதுப்போட்டி. இது அனைவருக்கும் பொதுவானது.இந்த பொதுப்போட்டி பிரிவில் உள்ள 31% இட ஒதுக்கீட்டில் எந்தெந்த சாதியினருக்கு எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைக்கிறது என்பது குறித்த உண்மைகளை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
அதற்காக அதுகுறித்த விவரங்களை வெள்ளை அறிக்கையாக தமிழக அரசு வெளியிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.