உலகக் கோப்பை செஸ் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழகத்தைச் சேர்ந்த வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
“தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை”- பாரிவேந்தர் அதிரடி அறிவிப்பு!
செஸ் போட்டியில் சர்வதேச தரவரிசையில் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ள வீரர்களை வீழ்த்தி இறுதிப் போட்டிக்காக பிரக்ஞானந்தாவின் வெற்றி பயணம் வியப்பில் ஆழ்த்தியதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
“உயிர் கொடுத்த அரசாக தி.மு.க. உள்ளது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
இறுதிப் போட்டியின் முடிவில் எதுவாக இருந்தாலும், அவரது சாதனை 140 கோடி இந்திய மக்களின் கனவுகளுடன் எதிரொலிப்பதாகவும், இந்தியா பெருமைக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரக்ஞானந்தா வெள்ளி பதக்கம் வென்றது, எதிர்காலத் தலைமுறையினருக்கும் ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.