தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து- 10 குழந்தைகள் காயம்
கடலூர் அருகே பெத்தாங்குப்பம் கிராமத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 10க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் காயமடைந்தனர்.
கடலூர் அருகே பெத்தாங்குப்பம் கிராமத்தில் தனியார் பள்ளி பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ரயில்வே கேட்டில், பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுநர் கீழே இறங்கி போன் பேசிய போது பள்ளி குழந்தைகள் விளையாட்டாக கியரை அசைத்ததால் பேருந்து பின்னோக்கி நகர்ந்து கவிழ்ந்தது. இதில் 10-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் காயம்டைந்தனர். உடனே அக்கம்பக்கத்தில் இருந்த கிராமத்தினர், காயமடைந்த பள்ளி குழந்தைகளை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். ஓட்டுநரின் அலட்சியத்தால் தான் விபத்து நடந்தததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.