Homeசெய்திகள்தமிழ்நாடுவிவாகரத்து செய்த கணவருடன் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தர்ணா

விவாகரத்து செய்த கணவருடன் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தர்ணா

-

விவாகரத்து செய்த கணவருடன் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தர்ணா

விவாகரத்து செய்த கணவருடன் சேர்த்து வைக்க கோரி காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. அலுவலகம் வாசலில், அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இளம் பெண்ணால் பரபரப்பு ஏற்பாட்டது.

காஞ்சி

சென்னை கொளத்துாரை சேர்ந்தவர் திலகவதி (வயது 27). இவருக்கும், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் விமல்குமார் என்பவருக்கும் மூன்றாண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது. தம்பதிகள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கியுள்ளது.

இந்நிலையில், தனது பெற்றோரிடம் வசித்து வந்த திலகவதி, இன்று காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.,அலுவலகம் வாசலில், கடும் வெயிலில் அமர்ந்துகொண்டு விவாகரத்து செய்த கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து அறிந்த அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் போலீசார், தர்ணா போராட்டம் நடத்திய இளம் பெண் திலகவதியிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், அவர் அங்கிருந்து எழுந்திருக்க மறுத்து அடம் பிடித்ததால், எஸ்பி அலுவலக வாசலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சி

கடுமையான வெயிலில் அடம் பிடித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஒருவர் சாகோதரியை போல் முகத்தை கழுவி விட்டு குடிக்க தண்ணீர் கொடுத்து, கணவருடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானம் செய்து, மனிதாபிமானத்தோடு நிழலுக்கு அழைத்து சென்றனர்.

 

MUST READ