தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (டிச.25) முகாம் அலுவலகத்தில், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் அறக்கட்டளை சார்பில் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
உருவாகிறது சுழல் 2-ம் பாகம்… 96 பட நடிகைக்கு வாய்ப்பு…
இச்சந்திப்பின்போது, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள், மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் எதிர்பாராத பெரும் தாக்குதலை நிகழ்த்தியபோது, அந்த சவால்களை எதிர்கெண்டு போர்க்கால அடிப்படையில் மக்களை காக்கும் பணியில் இமைப்பொழுதும் துஞ்சாது ஓய்வின்றி சுற்றிச்சுழன்று பணியாற்றும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துப் பாராட்டினார்.
இரட்டை வேடங்களில் நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர்…. ‘தேவரா’ படத்தின் ரிலீஸ் எப்போது?
இந்த நிகழ்வின் போது, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உடனிருந்தார்.