Homeசெய்திகள்தமிழ்நாடுஇட ஒதிக்கீடு ஆர்பாட்டம் பாமக வின் அரசியல் நாடகம் - ஓய்வு பெற்ற ஐஏஸ் அதிகாரி...

இட ஒதிக்கீடு ஆர்பாட்டம் பாமக வின் அரசியல் நாடகம் – ஓய்வு பெற்ற ஐஏஸ் அதிகாரி பாலசந்திரன்

-

- Advertisement -

பாமக வின் இட ஒதிக்கீடு கொள்கையை கையில் எடுத்ததே அரசியல் நாடமாகத்தான் பாா்க்கிறேன் என்று ஓய்வு பெற்ற ஐஏஸ் அதிகாரி பாலசந்திரன் தெரிவித்துள்ளாா்.

இடஒதுக்கீடு போராட்டம் என்பது பாமகவின் அரசியல் நாடகம் - ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன்

இது குறித்து அவர் தனியாா் யுடியுப் சேனலுக்கு அளித்த பேட்டியில் – பாமக வருகின்ற 26ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்பாட்டம்  நடத்துவது பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதாவது ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில்  கொடுத்த வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு உயர்நீதி மன்றத்தால் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இடஒதுக்கீடு தொடர்பான சரியான தரவுகளை நீதிமன்றம்  கேட்டுள்ளது.

இப்போது இட ஒதிக்கீட்டை முன்வைத்து மாநில அரசுக்கு ஒரு அழுத்தம் கொடுப்பதற்காக  இந்த ஆர்ப்பாட்டத்தை டாக்டர் ராமதாஸ்  நடத்துறாா். 2026ல் தேர்தல் வரப்போகிறது இது ஒரு தேர்தல் யுக்தி அவளோதான். பிரதமா் மோடியுடன் மிக நெருக்கமா இருக்கக் கூடியவர் டாக்டா் ராமதாஸ். ஒரு மாநில அரசுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று டாக்டா் ராமதாசுக்கு தெரியும் . சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கூடிய அதிகாரம் மதிய அரசுக்கு தான் இருக்கிறது. அந்த அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது.

மக்கள் கணக்கெடுப்பு எடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது. ஏற்கனவே அவர்களிடம்  மக்கள் கணக்கீட்டு பட்டியல்  இருக்கிறது. அந்த சர்வே படி  ஒவ்வொரு சாதிக்கும்  எந்த அளவுக்களில்  இடஒதுக்கீட்டின் பட்டியலில்   இருக்கிறாா்கள், எந்த அளவுக்கு பொருளாதரத்தில்  பின் தங்கி இருக்கிறாா்கள் என்பது  தெரியம். இது எல்லாம் மத்திய அரசு தொடா்பானது என்று பாமக தலைவர் ராமதாசுக்கு தெரியும். சாதிவாரியான கணக்கீடு வேனும்னு சொல்றது எப்படி சாத்தியமாகும். தமிழ்நாடு முதலமைச்சர் , நீங்கள் மத்திய அரசை செய்ய  சொல்லுங்கள் .மத்திய அரசிடம்  ஏற்கனவே இந்த விவரங்கள் எல்லாம் இருக்கிறது என்று சொல்கிறாா்.

முன்னாள் முதல்வா் எடப்பாடி  பழனிச்சாமி அன்றைக்கு இடஒதுக்கீடு கொடுத்ததே எந்த தகவலும்  இல்லாமல் தான் கொடுத்திருந்தாா். இது சாத்தியபடாது நிராகரிக்கப்படும் என்று தெரிந்தே ஒதுக்கீடு கொடுத்தாா். அப்போது அதிமுக  ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், என்று  ஓபிஎஸ் , இபிஎஸ், இருவர் இருந்தாா்கள். அப்போது இருந்த சூழ்நிலையில் அதிமுக வினர்  முடிவெடுத்தனா். ஆனால் அவர்கள் அதற்கு கையாண்ட வழிமுறைகள் தவறானது.

ஈபிஎஸ் வன்னியர்களுடைய ஆதரவை தனக்கு சாதகமாக பயன் படுத்த பாமக வுடன்  சேர்ந்தாா்.  ஓபிஎஸ் உடைய செல்வாக்கை குறைக்க வேண்டும் என்று நினைத்தது அதிமுகவின்  தோல்விக்கு காரணமானது.  தமிழகத்த்தில்  இப்படிப்பட்ட இட ஒதுக்கீடு தமிழ்நாட்டின் மக்களின் நலனுக்கு விரோதமானது.

பெரும்பான்மையாக உள்ள மூன்று பிறிவினர்கள்.  இந்த  பட்டியலில் பள்ளர், பறையர்,  அருந்ததியர், வள்ளுவர், அதில்  பறையருக்கு கிடைக்கிற அளவுக்கான வாய்ப்புகள் அருந்ததிர் மக்களுக்கு  கிடைப்பதில்லை. ஏன் எனில்  அவர்கள் பறையர்களைவிட  எல்லா வகையிலும்  பிற்படுத்தபட்டவா்கள். இவர்களுக்கு உள்ஒதுக்கீடு கொடுக்வில்லை என்றால் அவர்களால் மேல வரவே முடியாது என்று  உச்சநீதிமன்றம் வாய்ப்புகள் வழங்கியது.

ஆனால் வன்னியர்களுக்கும், முக்குலத்தோர்களுக்கும்  உள்ள இடஒதுக்கிட்டை நீதிமன்றம் ஆதரிக்காமல்  சரியான விவரங்களோடு வரவும் என்று  உச்சநீதி மன்றம் கூறியிருக்கிறது. மொத்த இடஒதுக்கீடே  69% மட்டும் தான். இதில் தமிழ்நாட்டில் ஏறக்குறைய 90 விழுக்காட்டிற்கு  மேல் உள்ள மக்கள் , சாதி வாரியாக இடஒதுக்கீடு கேட்கிறாா்கள் . இருப்பது 69%  இருக்கும் போது  90% எப்படி கொடுக்க முடியும்.

நாடு சுதந்திரம் அடைந்த போது சாதிவாரியான பட்டியல் வெளியிட்டாா்கள் . அப்போது அம்பேத்கா், பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்குள் நிரைய உட்பிரிவுகள் இருக்கிறது.  பட்டியல் வகுப்பை சேர்ந்தவர்களில் ,மலைவாழ் பழங்குடிகள், எஸ்.சி , எஸ்.டி, என்று  இவர்களை தவிர மற்ற அனைத்து சாதியினரையும் பிற்படுத்த பட்ட வகுப்பினா் என்று அறிவித்தாா்.

ஒடுக்கப்பட்டவர்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையினால்  ஓரளவிற்கு  வெற்றி கிடைத்திருக்கிறது. ஆனால் அது போதாது இன்னும்  அவர்களுக்கு நிறைய செய்ய வேண்டும்.  இன்றைக்கு  ஓபிசி மக்கள் கேட்பது தாழ்த்தபட்ட மக்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுத்து விட்டீர்கள் அதே போன்று எங்களுக்கும் மக்கள் தொகை கணக்குபடி இடஒதுக்கீடு வழங்குங்கள்  என்ற கோரிக்கையை முன்வைக்கிறாா்கள்.

இடஒதுக்கீடு போராட்டம் என்பது பாமகவின் அரசியல் நாடகம் - ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன்

மக்கள் தொகை கணக்கீட்டின்  அடிப்டையில்   ஓபிசியினர்  மட்டும்  இந்த நாட்டினுடைய மொத்த விழுக்காட்டில் 1911 ஆம் ஆண்டின் கணக்கு படி 52 விழுக்காடு இருக்கிறாா்கள் என்று புள்ளி விவரம் சொல்லுது. இவ்வாறு பாலசந்திரன் தெரிவித்துள்ளாா்.

பாஜகவை பகைத்துக் கொண்டால் அதோகதிதான்… வாலைச் சுருட்டிக் கொண்டு மொத்தமாக சரண்டரான ஏக்நாத்..!

MUST READ