Homeசெய்திகள்தமிழ்நாடுபெட்ரோல் பங்க்களில் ரூ.2,000 நோட்டு பெறப்படாது

பெட்ரோல் பங்க்களில் ரூ.2,000 நோட்டு பெறப்படாது

-

பெட்ரோல் பங்க்களில் ரூ.2,000 நோட்டு பெறப்படாது

பெட்ரோல் பங்க்களில் இன்று முதல் ரூ.2,000 நோட்டுக்கள் பெறப்படாது என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

2,000 ரூபாய் நோட்டு: வாங்காத பெட்ரோல் பங்க் ஊழியர் மீது  வழக்குப்பதிவு!/police complaint against petrol pump servent who said no to  ruppes 2,000

கடந்த 2018-2019 ஆம் ஆண்டு முதல் 2 ஆயிரம் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டது. கிளீன் நோட் பாலிசி அடிப்படையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த மே 19- ஆம் தேதி அன்று ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்திருந்தது. இதையடுத்து, பொதுமக்களிடம் இருந்து 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் வாங்கி வருகின்றனர். ஒரு நாளைக்கு ஒரு நபர் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பின், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு வழங்கக்கூடாது என அறிவுறுத்தியதை அடுத்து,
பெட்ரோல் பங்க்களில் இன்று முதல் ரூ.2,000 நோட்டுக்கள் பெறப்படாது என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

MUST READ