Homeசெய்திகள்தமிழ்நாடுதபால் வாக்குகளை எண்ணி முடிக்கும் வரை, கடைசி சுற்று எண்ணிக்கையை அறிவிக்கக் கூடாது - ஆர்.எஸ்.பாரதி!

தபால் வாக்குகளை எண்ணி முடிக்கும் வரை, கடைசி சுற்று எண்ணிக்கையை அறிவிக்கக் கூடாது – ஆர்.எஸ்.பாரதி!

-

தபால் வாக்குகளை எண்ணி முடிக்கும் வரை, கடைசி சுற்று எண்ணிக்கையை அறிவிக்கக் கூடாது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எழுதியுள்ள கடிதத்தில், “தபால் வாக்குகளை எண்ணி முடிக்கும் வரை, கடைசி சுற்று எண்ணிக்கையை அறிவிக்கக் கூடாது. முதலில் ETBS மற்றும் சாதாரண தபால் வாக்குகளை உள்ளடக்கிய தபால் வாக்குகள் தனியாக எண்ணப்பட வேண்டும். 30 நிமிடங்களுக்குப் பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எண்ணும் பணி தொடங்க வேண்டும்.

வழக்கத்திற்கு மாறாக தபால் வாக்குகள் இறுதியில் எண்ணப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையரின் செய்திக்குறிப்பு உள்ளது. இது சரியான நடைமுறை இல்லை என்று தோன்றுகிறது. இந்த அறிக்கை எண்ணும் முகவர்களின் மனதில் கணிசமான குழப்பத்தை ஏற்படுத்துகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அனைவருக்கும் வழிகாட்டுதல்களையும், அதற்கான பொது விளக்கத்தையும் அளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

MUST READ