- Advertisement -
பிரதமர் மோடியை எதிர்த்துப் போட்டியிடுவேன் – சீமான்
பிரதமர் மோடி இராமநாதபுரத்தில் போட்டியிட்டால் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “நரேந்திர மோடி தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிட்டால், அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன். அப்போதுதான் எனக்கு விடிவுகாலம் பிறக்கும். விடுதலை பெற்ற இந்தியாவில் எத்தனை கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் பிரதமராக இருந்துள்ளார்கள். ஒன்றுக்கும் பயன்படாத ரப்பர் ஸ்டாம்ப் பதவி மட்டும் தான் கொடுத்துள்ளார்கள். சிறுபான்மையினருக்கு வேறு எந்த சலுகையும் கொடுக்கப்படவில்லை.
மதத்தை மாற்ற முடியும், மொழியையும் இனத்தையும் மாற்ற முடியுமா?, இதில் என்ன சிறுபான்மை பெரும்பான்மை. அதனால் தான் சிறுபான்மை என்று சொன்னால் செருப்பால் அடிப்பேன் என்று சொன்னேன்” என்றார்.