Homeசெய்திகள்தமிழ்நாடுவிவசாயிகளை கண்டுகொள்ளாத கல் நெஞ்சக்காரர் மோடி - செல்வப்பெருந்தகை!

விவசாயிகளை கண்டுகொள்ளாத கல் நெஞ்சக்காரர் மோடி – செல்வப்பெருந்தகை!

-

விவசாயிகளை கண்டுகொள்ளாத கல் நெஞ்சக்காரர் மோடி என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில்,விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக கூட்டுவேன் என்று கூறினாரே, இன்றைக்கு விவசாயிகளின் நிலை என்ன? தலைநகர் தில்லியில் கடும் வெயிலையும், குளிரையும் பொருட்படுத்தாமல் நெடுஞ்சாலைகளிலே உண்டு, உறங்கி போராட்டம் நடத்தி 740 பேர் உயிர் துறந்தும் விவசாய சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்த மறுத்த பிரதமர் மோடியை விட ஒரு கல் நெஞ்சக்காரர் வேறு எவராவது இருக்க முடியுமா? எனத் தெரிவித்துள்ளார்.

 

 

MUST READ