spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு17வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

17வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

-

- Advertisement -

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 16ஆவது முறையாக நீட்டித்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

we-r-hiring

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில்,கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னையில் உள்ள புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக அமலாக்கத்துறை சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் இருந்து தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி மூன்று முறை மனு தாக்கல் செய்த நிலையில், மூன்று மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜி மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2வது முறையாக ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது- ஜூன் 28 வரை நீதிமன்றக் காவல்!
File Photo

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 17 ஆவது முறையாக நீட்டித்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 16 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது 17வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜனவரி 31ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

 

MUST READ