Homeசெய்திகள்தமிழ்நாடுகோவளத்தில் ஆகஸ்ட் 12 முதல் அலைச்சறுக்கு திருவிழா!

கோவளத்தில் ஆகஸ்ட் 12 முதல் அலைச்சறுக்கு திருவிழா!

-

- Advertisement -

 

கோவளத்தில் ஆகஸ்ட் 12 முதல் அலைச்சறுக்கு திருவிழா!
File Photo

சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற கோவளம் கடற்கரை, வரும் ஆகஸ்ட் 12, ஆகஸ்ட் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள அலைச்சறுக்கு திருவிழா களைக்கட்டவுள்ளது.

டிவிஎஸ் எஸ்சிஎஸ் ஆரம்பப் பங்கு வெளியீடு தொடக்கம்!

கோவளத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சர்வதேச அலைச்சறுக்கு திருவிழாவில் வெளிநாட்டு வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், அவர்களுக்கு கடும் சவால் அளிக்கும் வகையில் உள்ளூர் வீரர்களும் தயாராகி வருகின்றன. இந்த முறை நடைபெறும் அலைச்சறுக்கு திருவிழாவில் தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

முன்னதாக, இரண்டு அலைச்சறுக்கு பயிற்சிகள் மட்டுமே கோவளத்தில் இருந்த நிலையில், தற்போது அவை எட்டாக உயர்ந்துள்ளனர். வயது வித்தியாசமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அலைச்சறுக்கில் ஈடுபடுகின்றனர். காலை 06.00 மணி முதல் 09.00 மணி வரை பயிற்சி அளிக்கப்படும் நிலையில், அதற்கு கட்டணமாக ரூபாய் 1,500 வசூலிக்கப்படுகிறது.

எல்.ஐ.சி. லாபம் ஒரே ஆண்டில் 14 மடங்கு அதிகரிப்பு!

சென்னை மெரினா உள்ளிட்ட பல கடற்கரைகள் இருந்தாலும் கோவளத்தில் அலைச்சறுக்கு பயிற்சி அளிப்பதற்கான காரணத்தை விளக்கினார் முன்னாள் அலைச்சறுக்கு வீரரும், பயிற்சியாளருமான தரணி. “கோவளத்தில் அலைகள் நன்றாக வருவதால் இங்கு விழா நடத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ