Homeசெய்திகள்தமிழ்நாடு"தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அடக்குமுறை அதிகரிப்பு"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அடக்குமுறை அதிகரிப்பு”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

-

- Advertisement -

 

MKStalin

பா.ஜ.க. ஆட்சியில் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அடக்குமுறை அதிகரித்துள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

75ஆவது சுதந்திர தின நிறைவையொட்டி விடுவிக்கப்பட்ட கைதிகள்!

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் நடந்த மீனவர்கள் நல மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்றவில்லை. மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக ஒவ்வொரு முறையும் தான் கடிதம் எழுதிய பிறகே மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது,

இந்தாண்டு மட்டும் 74 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைதுச் செய்துள்ளது. கச்சத்தீவைத் தாரை வார்த்ததை எல்லாம் நிலையிலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எதிர்த்தார். கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பது குறித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை” என்று குற்றம்சாட்டினார்.

எஸ்.வி.சேகரின் மனுவைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

அத்துடன்,மீன்வர்களுக்கான 10 முக்கிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ