spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் மட்டுமே 52% பேர் உயர்கல்வி படிக்கிறார்கள் - அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் மட்டுமே 52% பேர் உயர்கல்வி படிக்கிறார்கள் – அமைச்சர் பொன்முடி

-

- Advertisement -

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 52% பேர் உயர்கல்வி பயில்வதாக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கத்தில் தமிழ்நாடு மாநில கவுன்சில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்பாக தமிழ்நாடு அறிவியல் அறிஞர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் தமிழக அரசின் உயர்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஆபிரகாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

we-r-hiring

இந்த விழாவில் தமிழக அறிவியலறிஞர்கள் விருதுகள் 2018 முதல் 2021 ஆம் ஆண்டு வரை வேளாண்மையியல், உயிரியல், வேதியியல், சுற்றுச்சூழல், அறிவியல், பொறியியல், தொழில்நுட்பவியல், கணிதவியல், மருத்துவவியல், இயற்பியல், சமூகவியல், கால்நடையியல் உள்ளிட்ட பிரிவுகளில் 4 ஆண்டுகளில் 40 பேருக்கு தமிழக அறிவியலறிஞர் விருதுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி மேடையில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்த நிகழ்ச்சி எப்போதோ நடத்து இருக்க வேண்டிய நிகழ்ச்சி அது தாமதம் ஆகிவிட்டது. சில காலம் செயலாளர் இல்லாமல் இந்த அறிவியல் மன்றம் செயல்பட்டது. தற்போது இதற்கு செயலாளர் நியமனம் செய்து உள்ளோம். இப்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. மீதமுள்ள ஆண்டுகளும் அறிவியலறிஞர்கள் விருதுகள் விரைவில் வழங்கப்படும். இந்த விருது சாதராண நிகழ்வு அல்ல. அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க நடைபெறும் நிகழ்வு.

உயர்கல்வியில் எண்ணிக்கை மட்டும் உயர்த்துவது நோக்கம், அல்ல திறமையை வளர்க்க வேண்டும். இந்தியாவிலலே அதிக அளவு தமிழகத்தில் தான் 52 % உயர்கல்வி படிக்கிறார்கள். இது தான் கல்வி வளர்ச்சி. அதற்காக உருவாக்கப்பட்டது தான் அறிவியல் தொழில்நுட்பம். படிக்கும் போதே வளர வேண்டும். ஆராய்ச்சி பணிகளை ஊக்கப்படுத்த வேண்டும். முதல்வர் அதை பாராட்டுகிறார். 10 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு 25 லட்சம் ரூபாய் கொடுத்து ஊக்கப்படுத்தி இருக்கிறார். எங்க ஊரை சேர்ந்த விஞ்ஞானி முத்துவேலும் அதில் உள்ளார். ஆராய்ச்சி மனபான்மையை வளர்க்க வேண்டும். அப்போது எல்லாம் பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆராய்ச்சியாளர்கள் தான் இருப்பார்கள்.

ஆராய்ச்சி துறையில் ஆவண காப்பகம் மற்றும் வரலாற்றுத்துறை சார்ந்த ஆராய்ச்சி மேற்கொள்பவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் வழங்கும திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையில் 63 கோடி ரூபாய் மதிப்பில் ஆய்வக பூங்கா உருவாக உள்ளது. UG படிப்பில் இருந்து PG படிப்பில் போய் சேரும் போது மாதம் ஆறு ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்தார். பத்தாம் மற்றும் பன்னிரன்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தால் இடைநிறுத்தல் கூடாது.

ஐடிஐ படிக்கலாம் பாலிடெக்னிக் படிக்கலாம். அண்ணா பல்கலைக்கழகத்தில் skill developed உள்ளது, என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, அறிவியல் தொழில்நுட்ப கழகத்தின் மூலம் பரிசு பெற்ற கல்வியாளர்களுக்கு அறிவியல் விஞ்ஞானிகளுக்கு குறிப்பாக 2018-2021 ஆண்டில் தேர்வு செய்யப்பட்டவர்கள் அவர்களுக்கு விருதுகளை வழங்கி உள்ளோம். விரைவில் மீதம் உள்ள ஆண்டுகளில் இருப்பவர்களுக்கும் விருதுகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

சென்னை பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா ஓராண்டாக
நடத்தப்படவில்லை என்றும், துணைவேந்தர் இல்லாததால் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு அதனை உயர்கல்வித்துறை செயலாளர் கண்காணித்து வருவதாகவும்,
உயர் கல்வித் துறை செயலாளர் துணைவேந்தருக்கு பதிலாக பட்டங்களில் கையெழுத்திடுவார், அதில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.
நாளை சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தான் கலந்து கொள்வதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

துணை வேந்தருக்கு பதிலாக உயர்கல்வித்துறை செயலாளர் கையெழுத்திடுவதால் எந்த சிக்கலும் ஏற்படாது என்றும், சட்டபூர்வ ஒப்புதலும் பெறப்பட்டு விட்டது. அதற்கு சிண்டிகேட் குழுவிலும் ஒப்புதல் கிடைத்துவிட்டது என அமைச்சர் தெரிவித்தார்.

MUST READ