spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு1,299 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு இன்று தேர்வு... 46 மையங்களில் 1.78 லட்சம் பேர்...

1,299 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு இன்று தேர்வு… 46 மையங்களில் 1.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்!

-

- Advertisement -

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 1,299 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு இன்று எழுத்துத் தேர்வு, 46 மையங்களில் நடை பெறுகிறது. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் 1.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

6 ஆண்டுகளுக்கு முன் தேர்வு எழுதியவா்களின் எதிர்காலம் என்னவாகும் – அறிவிப்பை வெளியிடுமா டி.என்.பி.எஸ்.சி ?

we-r-hiring

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 1,299 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு டிசம்பர் 21ஆம் தேதி தேர்வு நடைபெறும் என கடந்த ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இந்தத் தேர்வை எழுத தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய இணையதளம் மூலம் ஏராளமானோர் விண்ணப்பத்தனர். அவர்களில் தகுதியான 1,78,390 பேருக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 46 மையங்களில் உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் 9 மையங்களில் தேர்வுகள் நடைபெறுகிறது.

தேர்வுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய அதிகாரிகள், அந்தந்த மாநகர காவல் ஆணையர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் ஆய்வு செய்தனர். இரு தேர்வுகள்: தேர்வில் முறைகேட்டை
தடுக்க, விண்ணப்பதாரர்களின் இடது கை கட்டை விரல் ரேகை பதிவு செய்யப்படுகிறது. இதற்காக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போதே ஆன்லைன் வாயிலாக இடது கை கட்டை விரல் ரேகை சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

"பணியில் இருக்கும் போது செல்போன் பயன்படுத்த வேண்டாம்"- காவலர்களுக்கு காவல் ஆணையர் அறிவுறுத்தல்!
Photo: TN Police

இன்று காலை 10 மணி தொடங்கி மதியம் 12.30 மணி வரை முதன்மை தேர்வும், பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 5.10 மணி வரை தமிழ் தகுதித் தேர்வும் நடைபெறுகின்றன. தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் காலை 8 முதல் 9.30 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் வர வேண்டும் என்றும், தேர்வுக்கூடத்துக்குள் கைப்பேசி, ஸ்மார்ட் வாட்ச், கால்குலேட்டர், கைக்கடிகாரம் ஆகியவற்றை கொண்டுசெல்ல அனுமதி இல்லை என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ