Homeசெய்திகள்தமிழ்நாடுலாரி மீது மோதிய அரசு பேருந்து! மதுராந்தகம் அருகே பயங்கர விபத்து

லாரி மீது மோதிய அரசு பேருந்து! மதுராந்தகம் அருகே பயங்கர விபத்து

-

லாரி மீது மோதிய அரசு பேருந்து! மதுராந்தகம் அருகே பயங்கர விபத்து

மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற லாரி மீது அரசு பேருந்து மோதல்பேருந்து ஓட்டுனர் மட்டும் நடத்துனர் உள்பட நான்கு பேர் படு காயம் அடைந்தனர்.

Imageசெங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே இன்று அதிகாலை சென்னையில் இருந்து 38 பயணிகளுடன் திருச்சி நோக்கி சென்ற கொண்டிருந்த அரசு பேருந்து சென்னை To திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் முன்னாள் பிளாஸ்டிக் கேன்களை ஏற்றிச் சென்ற லாரி பின்னால் தனது கட்டுப்பாட்டை இழந்து மோதியது. அரசு பேருந்து லாரியின் பின்னால் மோதியதில் பேருந்தின் இடது புறம் பலத்த சேதம் அடைந்தது. இதில் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இரண்டு பயணிகள் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.

இதில் பேருந்து ஓட்டுனர் நடத்துனரும் பலத்த காயம் என்பதால் செங்கல்பட்டு மருத்துவமனையிலும் பயணிகள் இருவரை மதுராந்தகம் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்துக்கு குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

MUST READ