- Advertisement -
தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 4 மாநகராட்சிகள் மற்றும் 10 நகராட்சிகளில் கவுன்சிலர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்து அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.


தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய 4 மாநகராட்சிகளில் ஒவ்வொரு மாநகராட்சிகளும் தலா 48 கவுன்சிலர்கள் இடம் பெறுவார்கள் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருவையாறு உள்ளிட்ட 10 புதிதாக உருவாக்கப்பட்ட நகராட்சிகளில், ஒவ்வொரு நகராட்சிகளிலும் தலா 22 கவுன்சிலர்கள் இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


