Homeசெய்திகள்தமிழ்நாடுஅண்ணாமலையின் பாதயாத்திரையில் ரூ.25,000 திருட்டு

அண்ணாமலையின் பாதயாத்திரையில் ரூ.25,000 திருட்டு

-

அண்ணாமலையின் பாதயாத்திரையில் ரூ.25,000 திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை நடைபயணத்தில் நிர்வாகியின் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம் திருட்டு போன சம்பவம் தொடர்பாக அறந்தாங்கி போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Image

கடந்த மாதம் 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் நடை பயணத்தை தொடங்கிய அண்ணாமலை இரண்டாம் தேதி அன்று அறந்தாங்கியில் மாலையில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெறும் மேற்கொண்ட நிலையில், அண்ணாமலை அண்ணா சிலை அருகே ஒரு மணி நேரம் பொது மக்களிடம் உரையாடினார். அப்போது சென்னையை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் சமூக ஊடகப் பிரிவின் மாநில பார்வையாளர் அர்ஜுன மூர்த்தி அவருடைய பர்சில் நான்கு ஏடிஎம் கார்ட் ஆதார் கார்டு மற்றும் ரூபாய் 25 ஆயிரம் ரொக்கம் கூட்டத்தில் திருட்டு போனது. இதுகுறித்து அறந்தாங்கி காவல் நிலையத்தில் அர்ஜுன மூர்த்தி புகார் அளித்தார். பாரதிய ஜனதா கூட்டத்திலேயே கட்சி நிர்வாகியின் பர்ஸ் திருட்டு போனது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

 

MUST READ