
தமிழக முன்னாள் ஆளுநர் ஃபாத்திமா பீவி (வயது 96) உடல்நலக்குறைவால் இன்று (நவ.23) காலமானார்.

ரவுடியிசத்தை ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம் – திருச்சி சரக டி ஐ ஜி பகலவன்
காலமான ஃபாத்திமா பீவி, தமிழகத்தின் 11வது ஆளுநராக கடந்த 1997- ஆம் ஆண்டு முதல் 2001- ஆம் ஆண்டு ஜூலை 03- ஆம் தேதி வரை ஃபாத்திமா பீவி பதவி வகித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாகப் பணியாற்றியப் பெருமைக்குரியவர்.
கேரள மாநிலம், பத்தனம்திட்டாவில் கடந்த 1927- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30- ஆம் தேதி பிறந்தார். திருவனந்தபுரம் அரசு சட்டக்கல்லூரியில் இளங்கலை சட்டப்படிப்பை முடித்தார். அதைத் தொடர்ந்து, 1950- ஆம் ஆண்டு வழக்கறிஞராகப் பணியைத் துவக்கினார்.
புட்லூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு – கத்தியால் சரமாரியாக குத்தி நரிக்குறவர் படுகொலை
1983- ஆம் ஆண்டு கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், 1989- ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வுப் பெற்று பணியாற்றினார்.