spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆம்ஸ்ட்ராங் கொலை: சம்பவம் செந்திலை நெருங்கிய போலீஸ்..!! விரைவில் கைதாக வாய்ப்பு..

ஆம்ஸ்ட்ராங் கொலை: சம்பவம் செந்திலை நெருங்கிய போலீஸ்..!! விரைவில் கைதாக வாய்ப்பு..

-

- Advertisement -
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய , வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் சம்பவம் செந்திலின் இருப்பிடத்தை சென்னை போலீசார் நெருங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக உள்ள ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ரவுடி நாகேந்திரன் மற்றும் அவரது மகன் அஸ்வத்தாமன், மலர்க்கொடி, அஞ்சலை, ரவுடி புதூர் அப்பு, சீசிங் ராஜா உள்ளிட்ட 28 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களில் கைதான திருவேங்கடம் என்பவரை போலிஸார் என்கவுன்டர் செய்தனர். மீதமுள்ள 27 பேர் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங்

we-r-hiring

அனைவரும் நீதிமன்றக்காவலில் உள்ள நிலையில், முக்கியக் குற்றவாளியான சம்பவம் செந்திலை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு உட்பட பல வழக்குகளில் தொடர்புடைய சம்பவம் செந்தில் இதுவரை போலீஸாரிடம் சிக்கியதே கிடையாது. அப்படியிருக்க ஆம்ஸ்ட்ராங் கொலையில் மூலையாக செயல்பட்டுவிட்டு, வெளிநாடுகளில் தலைமறைவாக வாழ்து வருகிறார்.

இந்நிலையில் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் சம்பவம் செந்திலை நெருங்கி விட்டதாகவும், விரைவில் அவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வருவோம் என சென்னை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 6 க்கும் மேற்பட்ட கொலை உட்பட பல்வேறு வழக்குகளில் சம்பவம் செந்திலுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் ஏ2 குற்றவாளியாக சம்பவம் செந்தில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

MUST READ