spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு!

-

- Advertisement -

சென்னை விமான நிலையத்தில் ரூ. 2.08 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,760-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

we-r-hiring

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ53,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல் நேற்று முன் தினம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு சவரன் ரூ,53,240-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய தங்கம் விலையானது எந்தவிதமாற்றமுமின்றி முந்தைய நாள் விலையில் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டது.

 

இந்த நிலையில், இன்றைய ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ,53,760-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.55 உயர்ந்து ஒரு கிராம் 6,720-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3.30 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.97-க்கும், பார் வெள்ளி ரூ.97,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.96.50-க்கும் பார் வெள்ளி ரூ96,500-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

MUST READ