Homeசெய்திகள்தமிழ்நாடுபோக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு அமைச்சர் அழைப்பு!

போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு அமைச்சர் அழைப்பு!

-

 

சிறப்பு பேருந்து

போராட்டத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.

“தரக்குறைவான விமர்சனம் வேண்டாம்”- ஐ.டி.விங்கிற்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை!

காலிப் பணியிடங்களை நிரப்புதல், ஊதிய உயர்வு உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அண்மையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், போராட்டத்தைக் கைவிட்டு, பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு தொழிலாளர்களுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அழைப்பு விடுத்துள்ளார். அதில், பேரிடர் நேரத்தில் உடனடியாக களமிறங்கிப் பேருந்துகளை வழக்கம் போல் இயக்கி மக்கள் இயல்பு நிலைக்கு வர முன் நின்றவர்கள் போக்குவரத்துத் தொழிலாளர்கள் என குறிப்பிட்டிருக்கும் அமைச்சர், பேரிடர் நேரத்தில் பொதுமக்களுக்கும், முதலமைச்சருக்கும் உறுதுணையாக நிற்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

“எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்யும் வரை யுத்தம் தொடரும்”- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி!

போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு, வாரிசு அடிப்படையிலான பணி போன்றவற்றை அரசு நிறைவேற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர், பொங்கலுக்கு பிறகு தொழிற்சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ