Homeசெய்திகள்தமிழ்நாடுஎடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா பதில்!

எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா பதில்!

-

 

"மணிப்பூர் பற்றி பிரதமர் கவலைப்படவில்லை"- திருச்சி சிவா பேட்டி!
File Photo

சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தாக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி முன் வைத்த குற்றச்சாட்டு குறித்து தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா பதிலளித்துள்ளார்.

“மணிப்பூர் பற்றி பிரதமர் கவலைப்படவில்லை”- திருச்சி சிவா பேட்டி!

சென்னையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, “எப்போதோ முடிந்துப் போன விஷயத்தை புதிதாக நடந்தது போல் சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி. கடந்த 1989- ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் என்ன நடந்தது என்பதை கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், காங்கிரஸ் கட்சியின் எம்.பி. திருநாவுக்கரசர் ஆகியோரைக் கேட்டால் உண்மைத் தெரியும்.

“1989-ல் சட்டப்பேரவையில் ஜெயலலிதாவுக்கு நிகழ்ந்தது என்ன?”- எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

ஜெயலலிதா மருத்துவமனைக்கு செல்லும் வரை ஒரு ஓரத்தில் இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில் பொறுப்புடன் எடப்பாடி பழனிசாமி பேச வேண்டும்” என்றார்.

MUST READ