Homeசெய்திகள்தமிழ்நாடுஆதிச்சநல்லூரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு

ஆதிச்சநல்லூரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு

-

ஆதிச்சநல்லூரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் ஸ்ரீவைகுண்டம் சாலையில் அருங்காட்சியகம் அமைக்க அடிக்கல் நாட்டினார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

Image

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் ஆன்சைட் அருங்காட்சியகத்தை திறந்துவைத்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உலகதரத்தில் அமைக்கப்படும் அருங்காட்சியக கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். அகழாய்வில் கிடைத்த பொருட்களையும் பார்வையிட்டார் நிர்மலா சீதாராமன். எம்.பி., கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரும் நேரில் ஆய்வு செய்தார்.

Image

ஆதிச்சநல்லூரில் ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்பி, “நம் மூதாதையர்களின் வாழ்வியல் மற்றும் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளும் வகையில் ஆதிச்சநல்லூர் அகழாய்வு நடைபெற்றுள்ளது. அலெக்சாண்டர் ரியா அகழாய்வு மேற்கொண்ட நூறாண்டுகளுக்குப் பிறகு தற்போது நடைபெற்ற அகழாய்வில் தான் தங்கம் கிடைத்துள்ளது. மத்திய அரசு, தமிழ்நாடு அரசு, எழுத்தாளர்கள் என அனைவரும் சேர்ந்து ஒன்று கூடி இழுத்த தேர் தான் ஆதிச்சநல்லூர் அகழாய்வு. இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பாரட்டும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமையும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆதிச்சநல்லூரில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஆதிச்சநல்லூரில் பல கட்டங்களாக நடத்தப்பட்ட அகழாய்வில், இங்கிருந்து பல நாடுகளுக்கு வணிகம் நடைபெற்றது தெரியவந்துள்ளது. மனிதர்களை புதைத்த இடங்களும் இங்கு உள்ளது, அதில் அவர்கள் உபயோகப்படுத்திய பொருட்களும் வைக்கப்பட்டுள்ளது. 3,500 ஆண்டுகளுக்கு முன்னதாக உபயோகபடுத்தப்பட்ட நெல், திணை, தங்கம் ஆகியவற்றை நமது தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். ஆதிச்சநல்லூரில் அமைக்கப்படும் ஆன்சைட் அருங்காட்சியகத்திற்கு எந்த தடையுமின்றி போதுமான நிதியை மத்திய அரசு வழங்கும்” என்றார்.

MUST READ