Homeசெய்திகள்தமிழ்நாடு"மத்திய நிதியமைச்சர் ஆணவமாகப் பதில் கூறுகிறார்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“மத்திய நிதியமைச்சர் ஆணவமாகப் பதில் கூறுகிறார்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

-

- Advertisement -

 

"மத்திய நிதியமைச்சர் ஆணவமாகப் பதில் கூறுகிறார்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சாதுர்யமிருந்தால் சாதித்துக் கொள்ளலாம் என நிதியமைச்சர் ஆணவமாகப் பதில் கூறுகின்றனர் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஜடேஜா சிறப்பான பந்துவீச்சு – இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆல் அவுட்

தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மழை, வெள்ள பாதிப்புகளுக்கு இதுவரை மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிதி வழங்கவில்லை. தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்பு மீட்புப் பணிகளுக்கு நிதி வழங்கியது எனது அரசு தான். நலத்திட்டங்கள் அனைத்தையும் மாநில நிதியில் இருந்தே நாம் செயல்படுத்தி வருகிறோம்.

மழை, வெள்ள பாதிப்புக்கு ரூபாய் 37,000 கோடி நிதியை மத்திய அரசிடம் நாம் கேட்டோம். தேர்தலின் போது, தமிழக மக்களவை சந்திக்க வேண்டுமே என்ற பயம் பா.ஜ.க. அரசுக்கு கொஞ்சம் கூட இல்லை. பிரதமரும், நிதியமைச்சரும், தமிழ்நாட்டின் மீது பாராமுகமாக இருக்கின்றனர். சாதுர்யமிருந்தால் சாதித்துக் கொள்ளலாம் என நிதியமைச்சர் ஆணவமாக பதில் கூறுகிறார். சாதுர்யமிருந்ததால் தான் தமிழ்நாட்டை தலைசிறந்த மாநிலமாக மாற்றிக் காட்டியிருக்கிறோம்.

துருவ் ஜீரோல் சிறப்பான ஆட்டம் – இந்திய அணி 307 ரன்களுக்கு ஆல் அவுட்

பா.ஜ.க. அரசின் இடைக்கால தடைகளைத் தாண்டியே இவ்வளவு பணிகளை சாதிதுத்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

MUST READ