spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅண்ணாமலை தலைமையில் திருமணம்- அதிமுக நிர்வாகி நீக்கம்

அண்ணாமலை தலைமையில் திருமணம்- அதிமுக நிர்வாகி நீக்கம்

-

- Advertisement -

அண்ணாமலை தலைமையில் திருமணம்- அதிமுக நிர்வாகி நீக்கம்

விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவை செயலாளர் முரளியை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

edappadi

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திரு. S. முரளி (எ) ரகுராமன், (விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர்)

we-r-hiring

இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Image

அண்ணாமலையை வைத்து திருமண விழாவை நடத்திய அதிமுக நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். அண்ணாமலையின் 39வது பிறந்தநாளை ஒட்டி விழுப்புரத்தில் நேற்று 39 திருமண ஜோடிகளுக்கு திருமண நிகழ்ச்சியை முரளி நடத்தினார் என்பது குறிப்பிடதக்கது.

MUST READ