spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 340 ஆக அதிகரிப்பு... மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்ட நடிகர்...

வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 340 ஆக அதிகரிப்பு… மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்ட நடிகர் மோகன்லால்

-

- Advertisement -

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 340 ஆக அதிகரித்துள்ளது. 5வது நாளாக தொடரும் மீட்பு பணிகளை நடிகர் மோகன்லால் நேரில் பார்வையிட்டார்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை
யால் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை பகுதிகளில் கடந்த 30ஆம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணில் முப்படை வீரர்கள், தேசிய மற்றும் மாநில பேரிடர் படையினர் 5வது நாளாக ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை இன்று 340 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நிலச்சரிவில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.

we-r-hiring

கேரளாவின் வயநாட்டில் பெரும் நிலச்சரிவு- சிக்கித்தவிக்கும் குடும்பங்கள்

மீட்பு பணியில் அதிநவின டிரோன்கள், சென்சார் கருவிகள் பயன்படுத்தப்படும் நிலையில், இப்பணிக்கு தமிழக காவல்துறையின் மோப்ப நாய்களும் வந்துள்ளன. அட்டமலை பகுதியில் நிலச்சரிவில் சிக்கித்தவித்த 6 பேரை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

இதனிடையே வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை நடிகர் மோகன் லால் நேரில் பார்வையிட்டு, ராணுவ அதிகாரிகளிடம் கலந்துரையாடினர். பிராந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன் கர்னலாக பொறுப்பு வகிக்கும் மோகன் லால், ராணுவத்தினரின் பணிகளை பாராட்டினார்.

 

MUST READ