- Advertisement -
சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிக கனமழை பெய்தது. அதனால் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்தனர்.தற்போது ஆவடி காவல் ஆணையரகத்தில் காவல் ஆணையர் சங்கர் ஐபிஎஸ் அவர்கள் தலைமையில் 20க்கும் மேற்பட்ட பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
புயல்,மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்பதற்காக அரக்கோணத்தில் பயிற்சி முடித்த 20க்கும் மேற்பட்ட காவலர்கள் மிதவை பைபர் படகு,லைட் ஜாகெட், லைஃப் பாய், மரம் அறுக்கும் இயந்திரம், உள்ளிட்ட மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.