தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் எண்ணூரில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக எண்ணூரில் கடந்த 24 மணி நேரத்தில் 13 செ.மீ. மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. விருஞ்சிபுரம் 11 செ.மீ., கத்திவாக்கம் 10 செ.மீ., விம்கோ நகரில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மாதவரம், மணலி புதுநகர், மணலி, மேடவாக்கத்தில் தலா 8 செ.மீ. மழையும், பொன்னேரி, அம்பத்தூர், பேசின் பாலம், ஆவடி, பெரம்பூர், தண்டையார்பேட்டையில் தலா 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று ஒரு சில இடத்தில் மிக கனமழையும், 16 இடங்களில் கனமழையும் பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூா், கன்னியாகுமாி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், தென்காசி, நெல்லை, திருவண்ணாமலை, வேலூா், விழுப்புரம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.



