இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், இரு நாடுகளும் மிகுந்த நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என ஜி7 நாடுகளின் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளதோடு, போர் பதற்றத்தை உடனடியாக குறைக்க இரு நாடுகளுக்கும் ஜி7 அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி7 அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த கொடூரமான தீவிரமான தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதாகவும் இந்தியாவும் பாகிஸ்தானும் அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ராணுவ மோதல்கள், பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் இரு நாடுகளிலும் உள்ள பொது மக்களின் பாதுகாப்பில் ஜி7 அக்கறை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் பதற்றத்தை உடனடியாக குறைக்க இரு நாடுகளுக்கும் ஜி7 அழைப்பு விடுப்பதாகவும் அமைதியான முடிவை நோக்கி 2 நாடுகளும் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட வலியுறுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -