Homeசெய்திகள்உலகம்அமெரிக்காவில் செயின்ட் பாட்ரிக் தின கொண்டாட்டம்

அமெரிக்காவில் செயின்ட் பாட்ரிக் தின கொண்டாட்டம்

-

- Advertisement -

அமெரிக்காவில் செயின்ட் பாட்ரிக் தின கொண்டாட்டம்

செயின்ட் பாட்ரிக் தினத்தை முன்னிட்டு, சிகாகோவில் பளீர் பச்சை நிறத்தில் காட்சியளித்த ஆற்றில் ஏராளமானோர் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

பச்சை நிறத்திற்கு மாறிய ஆற்றில் மக்கள் உற்சாக பயணம்

அயர்லாந்து நாட்டு புனிதருக்கு மரியாதை செலுத்தும் விதமாக புனித பாட்ரிக் தினம் உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டுகிறது. அமெரிக்காவிலும் அன்றைய தினம் எங்கும் பசுமை நிறத்துடன் காட்சியளிப்பது வழக்கம். அந்தவகையில், புனித பாட்ரிக் தினத்தை முன்னிட்டு சிகாகோவில் உள்ள ஆறு சாயக்கலவையால் பச்சை நிறத்திற்கு மாற்றப்பட்டது. விழாவின் ஆரம்ப நிகழ்ச்சியை ஆற்றங்கரையோரம் நின்று ரசித்த பொதுமக்கள், ஆற்றில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

ஆண்டு தோறும் மார்ச் 17ம் தேதி கொண்டாடப்படும் புனித பாட்ரிக் தினம் அமெரிக்கா மட்டுமல்லாது ஆஸ்திரேலியா, கனடா, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும், கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவில் ஆரம்பமாக ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் உள்ள ஆறுகளை பச்சை நிறத்திற்கு மாற்றுவது அந்நாட்டு வழக்கமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ