மலேசியாவில் நெடுஞ்சாலையில் இறங்கிய விமானம்- 10 பேர் பலி
மலேசியாவில் தனியார் விமானம் சாலையில் விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் பயணம் செய்த எட்டு பேரும், சாலையில் காரில் பயணம் செய்த இரண்டு பேரும் என மொத்தம் 10 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
மலேசியாவில் வடக்குத்தீவன லங்காவி என்ற தீவில் இருந்து கோலாலம்பூர் நோக்கி தனியார் சிறிய விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. தரையிறங்கும் சில நிமிடங்களுக்கு முன்பாக விமான நிலையத்தில் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு துண்டிக்கப்பட்டு விமானம் விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து எப்படி நடைபெற்றது? என்பது குறித்து அறிவதற்கு விமானத்தின் கருப்பு பெட்டி தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது விபத்து நடந்த போது வெளியான சிசிடிவி காட்சிகளும் வீடியோவும் வெளியாகி உள்ளது.