ஈரான் திங்களன்று எதிர்க்கட்சியான ‘மக்கள் முஜாஹிதீன்’ (MEK) அமைப்பைச் சேர்ந்த மேலும் இரண்டு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றியுள்ளது. இவர்கள் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


முகமது என்றும் நிமா என்றும் அழைக்கப்படுபவர் மசூம் ஷாஹி (38) மற்றும் ஹமீத் வாலிடி (45) ஆகிய இருவர் இன்று அதிகாலையில் தெஹ்ரானுக்கு வெளியே உள்ள கரஜ் மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.
இவர்கள் இருவரும் ஈரானில் தடை செய்யப்பட்ட MEK அமைப்பின் உறுப்பினர்கள் என்று அந்த அமைப்பின் அரசியல் பிரிவான ‘ஈரான் எதிர்ப்பிற்கான தேசிய கவுன்சில்’ (NCRI) தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 28 அன்று தொடங்கிய அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் போரின் போது, மனித உரிமை அமைப்புகளால் ‘அரசியல் கைதிகள்’ எனக் கருதப்படுபவர்கள் மீது ஈரான் தொடர்ந்து மரணதண்டனையை நிறைவேற்றி வருகிறது.
மார்ச் மாதம் முதல் தற்போது வரை, MEK அமைப்பைச் சேர்ந்த 8 உறுப்பினர்களும், ஜனவரி மாதப் போராட்டங்கள் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்ட 7 ஆண்களும் என மொத்தம் 15 அரசியல் கைதிகள் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
நார்வேயைத் தளமாகக் கொண்ட ‘ஈரான் மனித உரிமைகள்’ அமைப்பின் இயக்குனர் மஹ்மூத் அமிரி மொகடம் கூறுகையில், “மார்ச் 19 முதல் குறைந்தது 15 அரசியல் கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர். வரும் நாட்களிலும் வாரங்களிலும் அரசியல் கைதிகள் மற்றும் போராட்டக்காரர்களுக்குக் கூடுதல் மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது,” என எச்சரித்துள்ளார்.
ஈரான் போர்: கச்சா எண்ணெய் விலை உயர்வு; பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம்
