Homeசெய்திகள்உலகம்விண்வெளி சுற்றுலா சென்ற இந்தியர்

விண்வெளி சுற்றுலா சென்ற இந்தியர்

-

விண்வெளி சுற்றுலா சென்ற இந்தியர்

ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தில் விண்வெளி சுற்றுலாவில் முதல் முறையாக இந்தியாவை சேர்ந்த ஒருவர் விண்வெளிக்கு சென்று திரும்பி உள்ளார்.

ப்ளூ ஆர்ஜின் ராக்கெட்டில் ஆந்திர விமானி விண்வெளி பயணம்

மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பும் திட்டத்தை பல்வேறு தனியார் நிறுவனங்கள் முன்னெடுத்துள்ளனர். ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலடிக், ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆர்ஜின், எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் ஜெஃப் பெசோஸின் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆர்ஜின் நிறுவன ராக்கெட்டில் ஏழாவது முறையாக ஆறு பேர் கொண்ட குழு நேற்று மாலை விண்வெளிக்கு பயணம் செய்தனர். விண்வெளி சுற்றுலா மூலம் ஆந்திராவைச் சேர்ந்த 30 வயதான விமானி கோபிசந்த் தோட்டகுரா விண்வெளிக்குச் சென்றுள்ளார்.

ப்ளூ ஆர்ஜின் ராக்கெட்டில் ஆந்திர விமானி விண்வெளி பயணம்

இந்த குழுவில் அமெரிக்காவின் முதல் கருப்பின விண்வெளி வீரரான முன்னாள் விமானப்படை கேப்டன் எட் டுவைட்டும் இடம் பிடித்துள்ளார்.

மேற்கு டெக்சாஸில் உள்ள ஏவுதலத்தில் இருந்து நியூ ஷெப்பர்ட் என்ற ராக்கெட்டில் இவர்கள் புறப்பட்டனர்.

பூமியில் இருந்து 106 கிலோமீட்டர் தொலைவில் 10 நிமிடங்கள் விண்வெளியில் பயணித்தனர். கர்மன் கோடு அருகே ஈர்ப்பு விசையை இழந்து வீரர்கள் சிறிது நேரம் விண்ணில் மிதந்து மகிழ்ச்சி அடைந்தனர்.

ப்ளூ ஆர்ஜின் ராக்கெட்டில் ஆந்திர விமானி விண்வெளி பயணம்

இதை தொடர்ந்து வீரர்கள் சென்ற காப்ஸ்யூல் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் சுற்றுலா பயணம் மகிழ்ச்சியாக இருந்ததாக விண்ணில் பயணம் செய்து திரும்பிய ஆந்திராவைச் சேர்ந்த கோபிசந்த் தோட்டகுரா தெரிவித்துள்ளார்.

MUST READ