ட்விட்டர் எனப்படும் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பயனர்களின் கணக்குகளை பிளாக் செய்யும் வசதி நீக்கப்படுவதாக அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிரான தி.மு.க. உண்ணாவிரதம் தொடங்கியது!
இதன் மூலம் எக்ஸ் பயனர்கள் இனி தங்களுக்கு தொந்தரவுத் தரக்கூடிய கணக்குகளை பிளாக் செய்ய முடியாது என்றும், தேவையின்றி வரும் குறுஞ்செய்திகளை மட்டுமே மியூட் செய்ய இயலும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேவையற்ற கணக்குகளை கட்டுப்படுத்த முடியுமே தவிர, பிளாக் செய்ய முடியாது என அந்நிறுவனம் கூறியுள்ளது.
மதுரையில் அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு தொடங்கியது!
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் செய்து வரும் நிலையில், இத்தகைய அறிவிப்பு பயனர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.