spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசுந்தர்.சி, வடிவேலு கூட்டணியில் இணைந்த மற்றுமொரு நடிகை!

சுந்தர்.சி, வடிவேலு கூட்டணியில் இணைந்த மற்றுமொரு நடிகை!

-

- Advertisement -

சுந்தர்.சி, வடிவேலு கூட்டணியில் மற்றுமொரு நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சுந்தர்.சி, வடிவேலு கூட்டணியில் இணைந்த மற்றுமொரு நடிகை!தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் சுந்தர்.சி. இவர் கடைசியாக தமன்னா, ராஷி கண்ணா ஆகியோரின் நடிப்பில் அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. அடுத்ததாக இவர் சங்கமித்ரா எனும் திரைப்படத்தை இயக்கப் போவதாக சொல்லப்படுகிறது. அதாவது ஏற்கனவே சங்கமித்ரா திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் படமானது அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. இந்நிலையில் மீண்டும் சங்கமித்ரா திரைப்படத்தை கையில் எடுக்கிறார் சுந்தர் சி. இதற்கிடையில் இவர், வடிவேலு, ராஷி கண்ணா ஆகியோரை முன்னணி கதாபாத்திரங்களாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.சுந்தர்.சி, வடிவேலு கூட்டணியில் இணைந்த மற்றுமொரு நடிகை! சமீபத்தில்தான் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு தென்காசி, அம்பாசமுத்திரம் போன்ற பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்த புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இந்த படத்தில் நடிகை கேத்ரின் தெரசா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம். இவர் ஏற்கனவே சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு 2 திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்து அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ