தங்கலான் 2 திரைப்படம் விரைவில் உருவாகும் என நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.
தங்கலான் திரைப்படம் என்பது கோலார் தங்க வயலில் இருந்து தங்கத்தை வெட்டி எடுப்பதற்காக ஒடுக்கப்பட்ட மக்களை அடிமைப்படுத்துவது பற்றி பேண்டஸி கதைக்களத்தில் பா. ரஞ்சித் இயக்கியுள்ளார். படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்த பார்வதி ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் மாளவிகா மோகனன், பசுபதி, டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்திருந்தார். கிஷோர் குமார் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். இந்த படம் கடந்த (ஆகஸ்ட் 15) சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்து படத்தை தாங்கி பிடித்துள்ளது. அதுபோல நடிகர் விக்ரம் தனது அபார நடிப்பினால் படத்தை உலக தரத்திற்கு கொண்டு செல்ல கடின உழைப்பை கொடுத்திருக்கிறார். இந்நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் ஒரே நாளில் 26 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நன்றி தெரிவிக்கும் விழாவில் பேசிய நடிகர் விக்ரம், ரசிகர்களுக்கு தங்கலான் திரைப்படம் பிடித்துள்ளதால் தங்கலான் 2 திரைப்படத்தை விரைவில் உருவாக்குவோம் என்று தெரிவித்துள்ளார்.