spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு2025 பொங்கல் பரிசுத்தொகுப்பு... கண்காணிக்க குழு அமைத்தது தமிழக அரசு!

2025 பொங்கல் பரிசுத்தொகுப்பு… கண்காணிக்க குழு அமைத்தது தமிழக அரசு!

-

- Advertisement -

2025 பொங்கல் பண்டிகைக்கு வேட்டி. சேலை வழங்கும் திட்டம் - ரூ.100 கோடி ஒதுக்கிடு செய்து தமிழக அரசு உத்தரவு2025 பொங்கல் பண்டிகைக்கு வேட்டி. சேலை வழங்கும் திட்டம் – ரூ.100 கோடி ஒதுக்கிடு செய்து தமிழக அரசு உத்தரவு

2025 பொங்கல் பண்டிகைக்கு 1, 77,64,476 சேலைகளும், 1,77,22,995 வேட்டிகளையும் உற்பத்தி செய்வதற்கான அனுமதியை வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

2025 பொங்கல் பரிசுத்தொகுப்பு... கண்காணிக்க குழு அமைத்தது தமிழக அரசு!

வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை 2025 பொங்கல் பண்டிகைக்கு தொடர்ந்து செயல்படுத்திடவும், குறிப்பிட்ட கால கெடுவிற்குள் உற்பத்தி செய்து வழங்கிடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.

we-r-hiring

2024 பொங்கல் பண்டிகைக்காக பயனாளிகளுக்கு விநியோகம் செய்ய அனுப்பி வைக்கப்பட்டு இருப்பில் உள்ள வேட்டி, சேலைகளை நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளது.

வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேட்டி, சேலைகள் பயனாளிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய விரல் ரேகைப் பதிவை கட்டாயமாக்க வேண்டும் என அறிவுறுத்தல்.

பொதுமக்களுக்கு வேட்டி, சேலை வழங்கும் நடைமுறையை கண்காணிக்க வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

MUST READ