spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரையறுக்க விரைவில் தனி கமிட்டி உருவாக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரையறுக்க விரைவில் தனி கமிட்டி உருவாக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

-

- Advertisement -

பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரையறுக்க விரைவில் தனி கமிட்டி உருவாக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் மாணவர்களிடையே மூடநம்பிக்கைகளை பரப்பும் நோக்கில் பேசிய மகா விஷ்ணுவை சைதாபேட்டை காவல்துறையினர் கைது செய்து, பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.

we-r-hiring

இந்த விவகாரம் தொடர்பாக தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஒவ்வொரு குடிமகனும் அறிவுசார்ந்த அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என அரசியலமைப்பு சட்டம் கூறியுள்ளதாகவும், அதனை பின்பற்றியே முதலமைச்சர் அமெரிக்காவில் முதலீட்டை ஈர்க்கும் பணியில் இருந்தாலும் மகா விஷ்ணு விவகாரம் தொடர்பாக உடனடியாக அறிக்கை வெளியிடுவதாகவும் கூறினார்.

anbil mahehs

மேலும், பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரையறுக்க தனி கமிட்டி உருவாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாகவும், விரைவாக இது தொடர்பாக கமிட்டி அமை க்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், மூடநம்பிக்கை பேச்சு விவகாரத்தில் மகா விஷ்ணு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

MUST READ