spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னையில் நள்ளிரவில் பல்வேறு இடங்களில் மிதமான மழை!

சென்னையில் நள்ளிரவில் பல்வேறு இடங்களில் மிதமான மழை!

-

- Advertisement -

சென்னையில் கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக மழை விட்டிருந்த நிலையில் நள்ளிரவில் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக கடந்த 15ஆம் தேதி சென்னையில் அதிக கனமழை கொட்டி தீர்த்தது. பின்னர் 2 நாட்களாக மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் இன்று நள்ளிரவு மீண்டும் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

we-r-hiring

குறிப்பாக வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதன் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் நள்ளிரவு மழை பெய்தது. அண்ணா சாலை, கிண்டி, சைதாப்பேட்டை, பம்மல், குரோம்பேட்டை, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, நந்தனம், தியாகராய நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நள்ளிரவு பரவலாக மிதமான மழை பெய்தது.

கடந்த 24 மணி நேரத்திற்கு மேலாக சென்னையில் மழை விட்டிருந்த நிலையில்  சென்னையில் மீண்டும் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது

MUST READ