spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகுமரி, நெல்லை உள்பட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

குமரி, நெல்லை உள்பட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

-

- Advertisement -

தமிழகத்தில் இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காற்றின் திசை மற்றும் வேகமாறுபாடு காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் வரும் 2ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

we-r-hiring

இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் குறிப்பட்டுள்ளது. இதேபோல், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் கணித்துள்ளது.

MUST READ