ஒரு அண்ணாமலை அல்ல ஓராயிரம் அண்ணாமலை வந்தாலும் தமிழகத்தைப் பொறுத்தவரை திராவிட மாடல் அரசு தான் கோலோச்சும் – அமைச்சர் சேகர்பாபு பேச்சு
வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் வடசென்னையில் இயங்கி வரும் பல்வேறு அரசு நூலகங்களை மேம்படுத்தி, கல்வி மையம் அமைப்பதற்காக நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் சேகர்பாபு இன்று காலை ஆய்வு செய்தார்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு , ஆயிரம் கோடி ரூபாயில் வடசென்னையின் வளர்ச்சி திட்டம் அறிவிக்கப்பட்டு அந்தத் தொகை படிப்படியாக உயர்ந்து இந்த ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் தேதி 2037 கோடி ரூபாய் அளவில் முதற்கட்டமாக பல்வேறு திட்டங்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 5427 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று அதையும் தாண்டி 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலாக இந்த வடசென்னையின் வளர்ச்சி திட்டத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. என்று அவர் கூறினார்.
தொடர்ந்து அண்ணாமலை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் , அண்ணாமலை ஒரு ஃபெயிலியர் அரசியல்வாதி என்பதை அவர் மூன்று மாதம் லண்டனில் அரசியல் படிக்கப் போயிருக்கும் போதே தெரிந்துவிட்டது. ஆனால் திமுகவிற்கு படிப்பறிவும் உள்ளது பட்டறிவும் உள்ளது. என்று அவர் கூறினார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அண்ணாமலை சொன்ன விமர்சனத்திற்கு பதில் அளித்த அவர் , துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் மாமண்ணனாக இருந்து தான் அரசியலுக்கு வந்துள்ளார். மழை வருவதற்கு முன்னதாகவே களத்திற்கு சென்று குறைகளை தீர்க்கும் துணை முதல்வராக மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் துணை முதல்வராக அவர் இருந்து வருகிறார். ஒரு அண்ணாமலை அல்ல ஓராயிரம் அண்ணாமலை வந்தாலும் தமிழகத்தைப் பொறுத்தவரை திராவிட மாடல் அரசு தான் கோலோச்சும் என்று அவர் கூறினார்.
அமமுகவில் இருந்தால் அவமானம்… டி.டி.வி.தினகரனின் செல்வாக்கை உடைக்கும் நிர்வாகிகள்