Homeசெய்திகள்தமிழ்நாடுதனியார் விடுதியில் விபச்சாரம் நடத்திவந்த நான்கு  பேர் - கைது

தனியார் விடுதியில் விபச்சாரம் நடத்திவந்த நான்கு  பேர் – கைது

-

- Advertisement -

வேலூர் சத்துவாச்சரி மண்டல அலுவலகம் எதிரே உள்ள தனியார் விடுதியில் சட்ட விரோதமாக விபச்சாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் நான்கு பேர் கைது

தனியார் விடுதியில் விபச்சாரம் நடத்திவந்த நான்கு  பேர் - கைது

வேலூர் மாநகர் சத்துவாச்சாரி பகுதியில், தனியாருக்கு சொந்தமான கீதா சர்வீஸ் அபார்ட்மெண்ட் செயல்பட்டு வருகின்றது.  இந்த அப்பார்ட்மெண்டில், பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்களை அழைத்து வந்து விபச்சாரம் நடத்தி வருவதாக சத்துவாச்சாரி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில்  சத்துவாச்சாரி காவல் ஆய்வாளர் லதா தலமையில் கீதா சர்வீஸ் அபார்ட்மெண்டிற்கு நேரில் சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அங்கு அடுத்தடுத்து நான்கு அறைகளில் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரிந்து, அப்பெண்களை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர்கள் திருத்தணியை சேர்ந்த கோவிந்தன், அடுக்கம்பாறையை சேர்ந்த விஜய், சேன்பாக்கத்தைச் சேர்ந்த அனிஷ், மற்றும் சித்தூரை சேர்ந்த மணிகண்டன் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.

மேலும் இவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், பல பெண்களை விபச்சாரத்தை ஈடுபடுத்தியது தெரியவந்துள்ளது.அடுத்த கட்டமாக எந்தெந்த இடங்களில் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தலையில் கல்லால் தாக்கி 2 வட மாநில தொழிலாளர்கள் கொலை!

MUST READ