spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைக்கோரி ஓபிஎஸ் தரப்பு மனுதாக்கல்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைக்கோரி ஓபிஎஸ் தரப்பு மனுதாக்கல்

-

- Advertisement -

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைக்கோரி ஓபிஎஸ் தரப்பு மனுதாக்கல்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைக்கோரி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர் செல்வம் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

eps ops

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தல் தடைக்கோரி மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிராபகர் ஆகியோர் ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் 24ம் தேதி வரை பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதித்து வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.

we-r-hiring

இந்நிலையில், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைக்கோரி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஒ.பி.எஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியானதாக கூறவில்லை எனவும் அதனை நிலுவையில் உள்ள மனுவில் தான் முடிவு செய்ய முடியும் என கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ops

இதனை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிலுவையில் உள்ள மனுக்களுடன் இந்த மனுவையும் விசாரிக்க வேண்டுமென வழக்கறிஞர் ராஜலட்சுமி ஆஜராகி நீதிபதி குமரேஷ் பாபு முன்பு முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி புதன்கிழமை விசாரணை எடுத்துக்கொள்வதாக ஒப்புதல் தெரிவித்தார்.

MUST READ