spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்அம்பேத்கர் சர்ச்சை... அழைப்பு விடுத்த பாஜக: டெல்லிக்கு விரைந்த சந்திரபாபு நாயுடு..!

அம்பேத்கர் சர்ச்சை… அழைப்பு விடுத்த பாஜக: டெல்லிக்கு விரைந்த சந்திரபாபு நாயுடு..!

-

- Advertisement -

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்படும் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்கள் இன்று பாஜக தலைவர் ஜேபி நட்டாவின் இல்லத்தில் கூடுகிறார்கள். கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த முறையும் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு பாஜக தனது அனைத்து என்டிஏ கூட்டணிக் கட்சிகளையும் கேட்டுக் கொண்டுள்ளது.

we-r-hiring

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் நினைவஞ்சலி நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

நட்டாவின் இல்லத்தில் நடைபெறவுள்ள சந்திப்பு, என்டிஏ கூட்டணிக் கட்சிகளின் வழக்கமான கூட்டம் இது எனக் கூறப்படுகிறது. ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கர் என பல விவகாரங்கள் குறித்தும் பாஜக விவாதிக்கலாம் என தேசிய ஜனநாயக கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் இரண்டு முக்கியமான வரைவு மசோதாக்கள், வக்ஃப் திருத்த மசோதா, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற அரசியலமைப்பு திருத்த மசோதா மீதான எதிர்கால நடவடிக்கையும் அடங்கும்.மோடி - அமித்ஷா

கூட்டணி கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்காக இந்த சந்திப்புகள் தொடர்ந்து நடத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. முக்கியமான அரசியல் விவகாரங்களில் கூட்டணிக் கட்சிகள் ஒருமனதாக இருக்க வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய அங்கமான தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திரப் பிரதேச முதல்வருமான சந்திரபாபு நாயுடு தேசிய தலைநகர் வந்தடைந்தார். இன்று நடைபெறும் கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார்.

MUST READ