நடிகர் சூர்யா கடைசியாக கங்குவா திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து ரெட்ரோ, சூர்யா 45, வாடிவாசல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் நடிகர் சூர்யா, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரும்புக்கை மாயாவி எனும் சூப்பர் ஹீரோ படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருந்தார்.
ஆனால் லோகேஷ் கனகராஜின் கனவு திட்டமான இரும்புக்கை மாயாவி படத்தில் சூர்யா நடிக்கவில்லை எனவும் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிக்க போவதாகவும் சமீபகாலமாக வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நடிகர் சூர்யா வேறொரு சூப்பர் ஹீரோ சப்ஜெக்டில் நடிக்க போவதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. பொதுவாக சூப்பர் ஹீரோ படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதோடு எதிர்பார்ப்புகளும் அதிகமாக இருக்கும். அதன்படி ஹாலிவுட்டில் நிறைய படங்கள் சூப்பர் ஹீரோ சப்ஜெக்டில் வெளியாகிறது. அதேசமயம் இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் சூப்பர் ஹீரோ படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன.
அதில் டோவினோ தாமஸ் நடிப்பில் மின்னல் முரளி என்ற படத்தை இயக்கிய பசில் ஜோசப், நடிகர் சூர்யாவிடம் சூப்பர் ஹீரோ கதை ஒன்றை சொல்லியதாகவும் புதிய தகவல் வெளிவந்துள்ளது. பிரபல இயக்குனரும் நடிகருமான பசில் ஜோசப் தற்போது ரன்வீர் சிங் நடிப்பில் சக்திமான் திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதன் பிறகு சூர்யா – பசில் ஜோசப் கூட்டணியிலான புதிய படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது.
- Advertisement -