பிரேமலு 2 படத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரேமலு எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் கிரிஷ் இயக்கியிருந்த நிலையில் நஸ்லேன் மற்றும் மமிதா பைஜு ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். காதல் சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பெரிய அளவில் பிரபலமாகாத நடிகர்களை வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படம் கேரளாவை தாண்டி தமிழ் ரசிகர்களிடையேயும் கவனம் பெற்றது. அதேசமயம் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளையும் பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரேமலு 2 திரைப்படம் உருவாகப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில் படக் குழுவினரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். அதன்படி பாவனா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் பகத் பாசில், திலீஷ் போதன், ஷியாம் புஷ்கரன் ஆகியோர் தயாரிக்க இருப்பதாகவும் தமிழ்நாட்டில் இந்த படத்தினை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இது தொடர்பான அறிவிப்பு போஸ்டரில் இப்படம் 2025 ஆம் ஆண்டு திரைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் பிரேமலு 2 திரைப்படத்தில் நடிகை அனஸ்வரா ராஜனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் குறித்த புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி 2025 ஜூன் மாதம் பிரேமலு 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என இப்படத்தின் தயாரிப்பாளர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். எனவே ரசிகர்கள் பலரும் பாக்ஸ் ஆபீஸ் சம்பவம் லோடிங் என்று சமூக வலைதள பக்கத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். இனிவரும் நாட்களில் இது தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.