புடவைகளுக்கு சாயமிடுவதில் நஷ்டம் ஏற்பட்டதால் யூடியூப்பில் கள்ள நோட்டு அச்சிடுவது பார்த்து தயாரித்து விற்பனை செய்த ஐந்து பேர் கும்பலை கைது செய்து ₹ 1 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல்.
ஆந்திர மாநிலம் பழைய குண்டூரில் உள்ள பாலாஜிநகரில் வசிக்கும் கர்ரி மணிகுமார், புடவைகளுக்கு சாயமிடும் பணியில் மிகவும் அனுபவம் பெற்றவர் . கொரோனாவுக்குப் பிந்தைய காலத்தில் வியாபாரத்தில் ஏற்பட்ட தொடர் இழப்புகள் காரணமாக கள்ள நோட்டுகளை தயாரிப்பதில் கவனம் செலுத்தினார். இதற்காக வீடியோக்களை யூடியூப்பில் பார்த்து அதே பகுதியைச் சேர்ந்த டோனேபுடியைச் சேர்ந்த மதுவுடன் சேர்ந்து, ஒரு பிரிண்டர், லேமினேஷன் இயந்திரம் மற்றும் பிற உபகரணங்களை வாங்கி கள்ள நோட்டுகளை அச்சிடத் தொடங்கினார்.
கள்ள நோட்டுகள் மீது சந்தேகம் வராமல் இருக்க கள்ள நோட்டு கட்டுகளை சுற்றிக் கட்டுவதற்கு எஸ்.பி.ஐ. என வங்கி அச்சிடப்பட்ட சீல் நாடாக்களையும் கட்டி யாருக்கும் சந்தேகம் வராத வகையில் தயார் செய்தனர். இந்நிலையில் இந்த மாதம் 1ம் தேதி டாக்டர் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தின் கே. கன்னவரம் மண்டலத்தில் உள்ள பாலந்தம் கிராமத்தைச் சேர்ந்த சிட்டூரி ஹரிபாபு காரை பழுதுபார்க்க கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பிக்கவோலுவைச் சேர்ந்த பல்லி ராம்பாபுவிடம் எடுத்து சென்றார்.அங்கு முன்பணமாக நான்கு ₹ .500 கள்ள நோட்டுகளைக் கொடுத்தார். கடந்த 3-ம் தேதி உதிரி பாகங்கள் வாங்க சென்ற ராம்பாபு அந்த நோட்டுகளைக் கொடுத்தபோது அவை கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது. இதனால் உடனடியாக பிக்கவோலு போலீசில் புகார் அளித்தார். எஸ்பி நரசிம்ம கிஷோர் மற்றும் கிழக்கு மண்டல டிஎஸ்பி பி. வித்யா தலைமையில் ஒரு சிறப்பு குழு அமைத்து விசாரணை செய்தனர்.
இதில் மணிகுமார் மற்றும் டோனேபுடி மது ஆகியோர் குண்டூரில் குடிசைத் தொழில் போல் கள்ள நோட்டுகளைத் தயாரித்து வந்தது உறுதி செய்யப்பட்டது. சித்துரி ஹரிபாபுவுடன், காக்கிநாடா மாவட்டம் கஜுலூரைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த சீகட்லா எடுகொண்டலு ஆகியோர் கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் சிறு வியாபாரிகள், நெரிசலான கடைகள் வார சந்தைகள் போன்ற இடங்களில் ஒரு ₹ 1 லட்சம் ரொக்கத்திற்கு 3 லட்சம் கள்ள நோட்டுகளை தருவதாகக் கூறி, இந்த நோட்டுகளை மாற்றிக் கொண்டுள்ளனர்.
ஐந்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு ₹ .1.6 கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுகள், ₹.9,680 ரொக்கம், ஒரு கார், 5 செல்போன்கள் மற்றும் கள்ளநோட்டுகள் அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் எஸ்பி நரசிம்ம கிஷோர் தெரிவித்தார்.
ஆன்லைன் மோசடி குற்றவாளிகளை வலைவீசி பிடித்த போலீசார்… ரூ.76.5 லட்சம் பறிமுதல்!