spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க இது இருந்தால் போதும்- தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க இது இருந்தால் போதும்- தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

-

- Advertisement -

தமிழ்நாடு அரசு நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு, பதிவு செய்யப்பட்ட கட்சி என்பதற்கான ஆதாரத்துடன் விண்ணப்பித்தால், பங்கேற்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க இது இருந்தால் போதும்- தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு பிரச்சனை தொடர்பாக, வருகிற மார்ச் 5ஆம் தேதி தமிழ்நாடு அரசு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இக்கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்பதற்கான ஆதாரத்துடன் விண்ணப்பித்தால், பங்கேற்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படுவதால், தமிழகத்தில் மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை குறைக்க வாய்ப்புள்ளது தொடர்பாக விவாதம் செய்ய, நாளை மறுநாள் (மார்ச் 5) தமிழ்நாடு அரசு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 183 கட்சி உள்ள நிலையில், அனைத்து கட்சி கூட்டத்திற்கு 45 கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, தங்கள் கட்சிக்கு அழைப்பு விடுக்காததால் அனைத்து கட்சி கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில், கட்சியின் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

we-r-hiring

அந்த மனுவில், “கட்சி துவங்கிய நாளில் இருந்து அனைத்து சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளோம். ஆனால், எந்த தேர்தலிலும் போட்டியிடாத, களம் காணாத பல கட்சிகளுக்கு, அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது பாரபட்சமானது. தமிழகத்தில் பல அரசியல் கட்சி உள்ள நிலையில், அரசு தங்கள் விருப்பத்திற்கேற்ப குறிப்பிட்ட கட்சிகளை மட்டுமே அழைக்க முடியாது. விதிகளின் படி, அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட வேண்டும். மேலும், தங்கள் கட்சியை அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைக்க வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று (மார்ச் 03) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், “பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும், அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க முடியும். கூட்டத்தில் பங்கேற்க மனுதாரர் கட்சி சார்பில் பொதுத்துறை செயலாளருக்கு விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

இந்த வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி, கட்சியின் பதிவு தொடர்பான ஆதாரத்துடன் இன்றே விண்ணப்பிக்கும்படி மனுதாரர் கட்சிக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், அந்த விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி, தமிழக அரசுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

திமுக ஆட்சி மீது பகீர் குற்றச்சாட்டு… சீமான் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

MUST READ