spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபரபரப்பை ஏற்படுத்திய பாடகி கல்பனாவின் தற்கொலை முயற்சி.... ஆபத்துக்கட்டத்தை தாண்டியதாக தகவல்!

பரபரப்பை ஏற்படுத்திய பாடகி கல்பனாவின் தற்கொலை முயற்சி…. ஆபத்துக்கட்டத்தை தாண்டியதாக தகவல்!

-

- Advertisement -

பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பரபரப்பை ஏற்படுத்திய பாடகி கல்பனாவின் தற்கொலை முயற்சி.... ஆபத்துக்கட்டத்தை தாண்டியதாக தகவல்!

பிரபல பின்னணி பாடகர் டி எஸ் ராகவேந்திராவின் மகள் தான் கல்பனா என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல பாடல்களை பாடி ரசிகர்கள் மனதை வென்றவர். இவர் டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். அதேசமயம் ஒரு சில படங்களிலும் நடித்திருக்கிறார் கல்பனா. இந்நிலையில்தான் இவர் ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த சில வருடங்களாக வசித்து வந்துள்ளார். எனவே இவருடைய வீட்டின் கதவு இரண்டு நாட்களாக திறக்கப்படாமல் இருக்க அதனை கவனித்த காவலாளி உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார். இதன் பின்னர் விரைந்து வந்த போலீசார் கல்பனாவின் வீட்டு கதவை உடைத்துப் பார்த்தபோது அவர் மயக்க நிலையில் சுயநினைவின்றி இருந்துள்ளார். பரபரப்பை ஏற்படுத்திய பாடகி கல்பனாவின் தற்கொலை முயற்சி.... ஆபத்துக்கட்டத்தை தாண்டியதாக தகவல்!அதைத்தொடர்ந்து அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு மருத்துவர்கள் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளித்து வருகின்றனர். அத்துடன் ஆபத்துக்கட்டத்தை தாண்டியதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இருப்பினும் இந்த சம்பவம் திரைத்துறையினர்களுக்கும், அப்பகுதி மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே கல்பனாவின் தற்கொலைக்கு என்ன காரணம்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கல்பனா மயக்க நிலையில் இருந்து மீண்ட பிறகு தான் இதற்கான உண்மையும் தெரியவரும். விரைவில் இது தொடர்பான அப்டேட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ